ARTICLE AD BOX

மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஏ.பாறைப்பட்டியில் மதுரை - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 29) மாலை முன்னால் சென்ற பயணிகள் ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகேயுள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் இன்று மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள அ.பாறைப்பட்டிக்கு நெல் நடவு செய்யும் பணிக்கு காலையில் சென்றனர். பின்னர் பணிமுடிந்து மாலை 4.30 மணியளவில் சொந்த ஊருக்கு செல்ல ஷேர் ஆட்டோவில் 10 பேரும் பயணித்தனர்.

9 months ago
8







English (US) ·