ARTICLE AD BOX

மதுரையில் நள்ளிரவில் ஜேசிபி (மண் அள்ளும் இயந்திரம்) வாகனத்தை எடுத்துச் சென்ற 17 வயது சிறுவன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியுள்ளான். போதையில் இருந்த இச்சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை செல்லூர் 50 அடி ரோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதியிலுள்ள ஜேசிபி உரிமையாளரிடம் கிளீனராக பணிபுரிந்தான். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அந்த சிறுவன் ஜேசிபி வாகனத்தை செல்லூர் - குலமங்கலம் மெயின் ரோட்டில் ஓட்டிச் சென்றுள்ளான். அப்போது செல்லூர் 50 அடி சாலையில் இருந்து கண்மாய்க்கரை சாலை வரையிலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரம் நிறுத்தியிருந்த கார், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி சேதப்படுத்தியுள்ளான்.

9 months ago
9







English (US) ·