ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் நள்ளிரவில் ஜேசிபி வாகனத்தை எடுத்துச் சென்ற 17 வயது சிறுவன், சாலையோரத்தில் நின்றிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை செல்லூர் 50 அடி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் அப்பகுதியிலுள்ள ஜேசிபி உரிமையாளரிடம் கிளீனராக பணிபுரிந்து வந்தார். அச்சிறுவனுக்கு தினமும் ஜேசிபி உரிமையாளர் ரூ.100 செலவுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த சிறுவன் ஜேசிபி வாகனத்தை எடுத்து ஒட்டியுள்ளார்.

9 months ago
9







English (US) ·