மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி: 12 பேர் மீது வழக்கு

7 months ago 8
ARTICLE AD BOX

மதுரை: சகோதரர்களின் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் மனை பிரிவு ஒப்புதல் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சகோதரிகள் உட்பட 12 பேர் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு பதியப்பட்டது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த கேஜி. பாலசுப்பிரமணியன் என்பவரது குடும்பத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலம் மதுரை வளர்நகர் பகுதியிலுள்ள இலந்தைக்குளத்தில் இருந்தது. இதில் சுமார் 75 சென்ட இடத்தை பாலசுப்பிரமணியனின் தாயார் ஜெயந்திக்கு 1969-ல் தான செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எழுதி கொடுக்கப்பட்டது. ஜெயந்தி இறந்த பிறகு பல லட்சம் மதிப்புள்ள அந்த இடத்தை பாலசுப்பிரமணியன், அவரது தம்பி வெங்கடேஷ், சகோதரி உஷாராணி ஆகியோருக்கு பாகப்பிரிவினை செய்தனர்.

Read Entire Article