மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்: கோவையில் 8 வடமாநில இளைஞர்கள் கைது

9 months ago 9
ARTICLE AD BOX

கோவை: கோவையில் மத்திய அரசு வேலைக்கான தேர்வு எழுத ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் 8 பேரை சாயிபாபா காலனி போலீஸார் திங்கள்கிழமை (மார்ச் 10) இரவு கைது செய்தனர்.

கோவையில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் குழுவின் இயக்குநர் குன்ஹி கண்ணன் என்பவர் கோவை சாயிபாபாகாலனி போலீஸாரிடம் இன்று (மார்ச் 10) புகார் மனு அளித்தார். அதில், ‘‘கோவை வனத்துறை அலுவலக வளாகத்தில் வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் குழு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில், கடந்த மாதம் 8-ம் தேதி, 9-ம் தேதி ஆகிய இருநாட்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப்ஸ் (எம்.டி.எஸ்) மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு நடத்தியது.

Read Entire Article