ARTICLE AD BOX

புதுடெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 47.5 ஓவர்களில் 412 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பெத் மூனி 75 பந்துகளில், ஒரு சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 68 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 72 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் சேர்த்தனர்.
413 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா அதிரடி தொடக்கம் கொடுத்தார். மட்டையை சுழற்றிய அவர், 50 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய 2-வது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேலும் இந்திய வீராங்கனைகளில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார் மந்தனா. இதற்கு முன்னர் அவர், 70 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

3 months ago
5







English (US) ·