மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு: பிளம்பரை கொலை செய்தவர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: மனை​வி​யுடன் திரு​மணத்தை மீறிய உறவில் இருந்த பிளம்​பரை, கத்​தி​யால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை பெருங்​குடி கல்​லுக்​குட்டை திரு​வள்​ளுவர் நகர் பகு​தியை சேர்ந்​தவர் அன்பு கணபதி (28). பிளம்​பர் வேலை செய்து வந்​தார். இவரது வீட்​டின் அருகே வசித்து வருபவர் ராஜதுரை (30). அன்பு கணப​திக்​கும், ராஜதுரை மனை​விக்​கும் இடையே கடந்த 6 மாதங்​களாக திரு​மணத்தை மீறிய உறவு இருந்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இது ராஜதுரைக்கு தெரிய​வந்​ததையடுத்​து, இரு​வரை​யும் கண்​டித்​துள்​ளார். மேலும், இதுதொடர்​பாக ராஜதுரைக்​கும், அவரது மனை​விக்​கும் இடையே நேற்​று​முன்​தினம் இரவு தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, ராஜதுரை மற்​றும் அன்பு கணப​தி​யின் குடும்​பத்​தினர்​கள் பேச்​சுவார்த்தை நடத்தி இப்​பிரச்​சினைக்கு முற்​றுப்​புள்ளி வைத்​துள்​ளனர்.

Read Entire Article