ARTICLE AD BOX

மயிலாடுதுறை: கல்லூரி மாணவர் உட்பட 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராயம் விற்றதை கண்டித்ததாலும், போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாலும் இந்த கொலை நடந்துள்ளதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை(28), ராஜ்குமார்(34) ஆகியோர், புதுச்சேரி சாராயம், மது பாட்டில்களை காரைக்காலில் இருந்து சட்ட விரோதமாக வாங்கி வந்து, அப்பகுதியில் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தங்கதுரையின் சகோதரரர் மூவேந்தனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்(28) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

10 months ago
9







English (US) ·