ARTICLE AD BOX

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20). இவர் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர். இவர் தற்போது மதுரை அண்ணா பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தீபாவளி பண்டிகைக்காக விடுமுறைக்கு ஊருக்கு வந்த விஷ்ணு, வியாழக்கிழமை மாலை நேரத்தில் மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை விஷ்ணு, அவர் படித்த மல்லிப்பட்டினம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் பள்ளி சுவற்றில் என் சாவுக்கு காரணம் பாபு என எழுதப்பட்டிருந்தது.

2 months ago
4







English (US) ·