ARTICLE AD BOX

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள எட்டுப் புளிக்காடு கிராமத்தில் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளியில் கத்திரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(53) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பள்ளித் தலைமை ஆசிரியை நரியம்பாளையம் விஜயாவிடம்(55) புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்தப் புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

2 months ago
4







English (US) ·