ARTICLE AD BOX

சென்னை: மின்வாரிய ஊழியர்போல நடித்து, ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டுக்குள் புகுந்து 8 பவுன் நகைகளைத் திருடிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புழல் கதிர்வேடு பகுதியில் வசிப்பவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை திரிபுரசுந்தரி (69). கடந்த 30ம் தேதி அதிகாலை இவரது கணவர் யோகா வகுப்புக்கு சென்றிருந்தார். திரிபுரசுந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் டிப்டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் வந்தார். வந்தவர் மூதாட்டியிடம், தான் மின்வாரிய ஊழியர் என்றும், இப்பகுதியில் மின்கசிவு பிரச்சினை உள்ளதாக புகார் வந்ததால் சோதனை செய்ய வந்திருப்பதாகவும், உங்களது வீட்டில் மின் இணைப்பை சரி பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

6 months ago
7







English (US) ·