ARTICLE AD BOX

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத் திறனாளியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மதியம் அழைப்பு ஒன்று வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய நபர் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும் தெரியவந்தது.

2 months ago
4







English (US) ·