‘முன்ன போனா முட்டுது... பின்ன போனா ஒதைக்கிது’ - காவலர்களைக் கதறவிட்ட கஞ்சா ஐயப்பன்!

8 months ago 8
ARTICLE AD BOX

என்ன சார் பண்றது... முன்ன போனா முட்டுது பின்ன போனா ஒதைக்கிதுன்ற கதையா போச்சுது எங்க பொழப்பு” என்று புலம்பித் தவிக்கிறார்கள் விருத்தாச்சலம் அருகிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேஷன் போலீஸார்!

​திரு​விளை​யாடல் தருமி கணக்​காய் இவர்​களை இப்​படி புலம்​ப​விட்​ட​வர் கஞ்சா அடிக்ட் ஐயப்​பன். விருத்​தாசலம் அருகே சி.கீனனூர் கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் ஐயப்​பன். சிறுமியை திரு​மணம் முடித்த குற்​றத்​துக்​காக போக்சோ வழக்​கில் உள்ளே போய்​விட்டு ஜாமீனில் வெளி​யில் வந்த இவரை கஞ்​சாவுக்கு அடிமை என்​கிறது போலீஸ். இந்த நிலை​யில், கடந்த 10-ம் தேதி தன்​னிலை மறந்த நிலை​யில் மூதாட்டி ஒரு​வரை தாக்கி இருக்​கி​றார் ஐயப்​பன். இதையடுத்து அவரை சுற்றி வளைத்து ‘கவனித்த’ பொது​மக்​கள், கையோடு கொண்டு போய் கரு​வேப்​பிலங்​குறிச்சி காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​திருக்​கி​றார்​கள்.

Read Entire Article