ARTICLE AD BOX

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெம்பக்கோட்டை அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). அதிமுக கிளைச் செயலாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவர் அதே கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மேல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரோல் குண்டு வெடித்து பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

7 months ago
8







English (US) ·