ARTICLE AD BOX

சென்னை: மெரினா கடற்கரையில் நொச்சிக்குப்பம் எதிரே உள்ள மணல் பரப்பில் நேற்று அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மெரினா காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

1 month ago
3







English (US) ·