ARTICLE AD BOX

இந்தூர்: இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 வயது நபரை, ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மேகாலயா காவல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆனந்த் குர்மியை (23) இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மேகாலயா காவல் துறை ஆஜர்படுத்தியதாக இந்தூரின் கூடுதல் காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியா தெரிவித்தார். மேகாலயா காவல் துறையின் வேண்டுகோளின் பேரில் ஜூன் 16 வரை குர்மியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. திங்கள்கிழமை மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட குர்மி இந்தூருக்கு அழைத்து வரப்பட்டார்.

6 months ago
7







English (US) ·