மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை: பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது

4 months ago 6
ARTICLE AD BOX

மதுரை: மதுரை மாவட்​டம், மேலூர் அருகே காதல் விவ​காரத்​தில் இளைஞர் அடித்​துக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில், பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்டனர். மேலூர் அரு​கிலுள்ள பொட்​டப்​பட்​டியைச் சேர்ந்த சதீஷ்கு​மார்​(21) என்​பவர், தும்​பைப்​பட்​டியைச் சேர்ந்த ராக​வி(24) என்பவரைக் காதலித்​தார். ராகவிக்கு ஏற்​கெனவே திரு​மண​மாகி 2 குழந்​தைகள் உள்ள நிலை​யில், சில ஆண்​டு​களுக்கு முன்பு அவரது கணவர் இறந்து விட்டார்.

இந்​நிலை​யில், இரு​வரின் காதலுக்​கும் எதிர்ப்பு கிளம்பியது. சித்தி வீட்​டில் தன்னை கொடுமைப்படுத்​து​வ​தாக ராகவி செல்போன் மூலம் சதீஷ்கு​மாருக்கு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து மேலூர் காவல் நிலை​யத்​தில் சதீஷ்கு​மார் புகார் அளித்​தார். அதன்​பேரில், காவல் நிலை​யத்​தில் இரு வீட்​டாரிட​மும் ஆகஸ்ட் 16-ம் தேதி போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அப்​போது, பெற்​றோருடன் செல்ல ராகவி மறுத்​து, சதீஷ்குமாருடன் இருசக்கர வாக​னத்​தில் சென்​று​விட்​டார்.

Read Entire Article