ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது தமிழகம்

2 months ago 4
ARTICLE AD BOX

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழகம் - ஜார்க்​கண்ட் அணி​கள் இடையி​லான போட்டி கோவை​யில் உள்ள ராமகிருஷ்ணா கல்​லூரி மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. டாஸ் வென்று பேட் செய்த ஜார்க்​கண்ட் அணி முதல் இன்​னிங்​ஸில் 132.1 ஓவர்​களில் 419 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக இஷான் கிஷன் 173 ரன்​களும், சாஹில் ராஜ் 77 ரன்​களும் சேர்த்​தனர்.

இதையடுத்து பேட் செய்த தமிழக அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 11 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 18 ரன்​கள் எடுத்​திருந்​தது. பாலசுப்​ரமணி​யன் சச்​சின் 0, கேப்​டன் நாராயண் ஜெகதீசன் 3, பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 9, ஆந்த்ரே சித்​தார்த் 2, பாபா இந்​திரஜித் 0 ரன்​களில் நடையை கட்​டினர். அம்ப்​ரிஷ் ரன் ஏதும் எடுக்​காமலும், ஷாருக் கான் 4 ரன்​களு​ட​னும் களத்​தில் இருந்​தனர்.

Read Entire Article