ARTICLE AD BOX

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 115 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து விளையாடிய நாகாலாந்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 58 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. தேகா நிஸ்சல் 80, யுகந்தர் சிங் 58 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

2 months ago
4







English (US) ·