ARTICLE AD BOX

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய காகிசோ ரபாடா,
செனுரன் முத்துசாமியுடன் இணைந்து 98 ரன்கள் குவித்து அசத்தினார்.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68, கைல் வெர்ரெய்ன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

2 months ago
4







English (US) ·