ARTICLE AD BOX

சென்னை: சென்னை புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் செல்வி (39). இவர், புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த 21-ம் தேதி பணிநிமித்தமாக நீதிமன்றத்துக்கு சென்றவர் பின்னர் திரும்பவில்லை. இதனால், சக போலீஸார் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீஸார் சென்றனர். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமாக தட்டியும் திறக்கவில்லை.

9 months ago
8







English (US) ·