ARTICLE AD BOX

ராணிப்பேட்டை: மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் ஆத்திரமடைந்த கணவன் மதுபோதையில் தனது மாமியார் மற்றும் உறவினர்களான சித்தி, சித்தப்பா ஆகிய 3 பேரையும் நேற்றிரவு (மே 14) கொலை செய்த சம்பவம் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் அடுத்த புதுகுடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (30), விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (26) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலுவின் சித்தப்பா மகனான கொடைக்கல் பகுதியைச் சேர்ந்த விஜய் (26) என்பவருக்கும் புவனேஸ்வரிக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதனால், ஏற்பட்ட பிரச்சினையால் புவனேஸ்வரி தனது கவணரைப் பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

7 months ago
8







English (US) ·