ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் கேப்டனான ரஜத் பட்டிதார் @ IPL 2025

10 months ago 9
ARTICLE AD BOX

பெங்களூரு: அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதாரை நியமித்துள்ளது அந்த அணி நிர்வாகம். கோலி மீண்டும் கேப்டன் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு தங்கள் அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அறிவிக்கும் விதமாக பிரத்யேக நிகழ்வை ஏற்பாடு செய்தது ஆர்சிபி அணி. இதில் 31 வயதான இந்திய வீரர் ரஜத் பட்டிதார் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2021 சீசன் முதல் அவர் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார்.

Read Entire Article