ARTICLE AD BOX

சிட்னி: சிட்னி ஒருநாள் போட்டியில் தனது 50-வது சதம் விளாசி சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா. அதேவேளையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்தார் விராட் கோலி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம், விராட் கோலியின் அரை சதம், ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

2 months ago
4







English (US) ·