லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தோல்வி - ‘பிட்ச்’ குறித்து ஜாகீர் கான் கடும் அதிருப்தி

8 months ago 8
ARTICLE AD BOX

நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் ஆட்டம் ஏப்ரல் 1-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சொந்த மைதானமான லக்னோவில் நடைபெற்றது. ஆனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி. இது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆலோசகரான ஜாகீர் கானை எரிச்சலை அடையச் செய்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிட்ச் தயாரிப்பாளர் இங்கு வந்து பிட்ச்சை அவர்களுக்குச் சாதகமாக அமைத்தது போல் இருந்தது என்று ஜாகீர் கான் சாடியுள்ளார். இத்தனைக்கும் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் பஞ்சாப் கிங்ஸ் அணிதான் அதிகம் தங்கள் சொந்த மண்ணில் அதாவது மொஹாலியில் அதிகம் தோற்றுள்ளனர். ஆனால், அவர்கள் ஒருபோதும் பிட்சைக் குறை கூறியதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

Read Entire Article