லக்னோவுக்கு மரண பயம் காட்டிய ரிங்கு சிங் - ‘த்ரில்’ போட்டியில் கொல்கத்தா போராடி தோல்வி!

8 months ago 8
ARTICLE AD BOX

நடப்பு ஐபிஎல் சீசனின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ் அணியின் இன்னிங்ஸை குயிண்​டன் டி காக் - சுனில் நரேன் ஜோடி ஓபன் செய்தனர். 2 சிக்ஸர்களுடன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆகாஷ் தீப் பந்துவீச்சில் குயிண்​டன் டி காக் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களத்துக்கு வந்தார் கொல்கத்தா கேப்டன் அஜிங்க்ய ரஹானே, சுனில் நரேன் உடன் பார்டனர்ஷிப் அமைத்து பொறுப்புடன் விளையாடினார். இந்த இணை 54 ரன்கள் சேர்த்தது.

Read Entire Article