லாரியில் ரகசியமாக பதுக்கிவைத்து ரூ.2 கோடி கஞ்சா கடத்திய இருவர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: ஆந்​தி​ரா​விலிருந்து தமிழகத்​துக்கு கடத்தி வரப்​பட்ட ரூ.2 கோடி மதிப்​புள்ள கஞ்​சாவை, போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். பிற மாநிலங்​களில் இருந்து தமிழகத்​துக்கு கஞ்சா கடத்தி வரப்​படு​வ​தாக, மத்​திய போதைப் பொருள் தடுப்பு பிரி​வின் சென்னை மண்டல போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, போலீ​ஸார் சென்​னையை அடுத்த சோழ​வரம், காரனோடை டோல் பிளாசா அருகே சாதாரண உடை​யில் கண்​காணித்​தனர்.

அப்​போது, அந்த வழி​யாக வந்த அசோக் லேலண்ட் வகை பெரிய வாக​னத்தை மடக்கி சோதனை செய்​தனர். ஆனால், வாக​னத்​தில் எந்த பொருட்​களும் இல்​லை. சந்​தேகம் அடைந்த போலீ​ஸார் மீண்​டும் சோதித்தபோது, வாக​னத்​தின் இடையே பெட்டிகளில் 320 கிலோ கஞ்​சா ரகசியமாக பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

Read Entire Article