ARTICLE AD BOX

மேற்கு இந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி வடக்கு அயர்லாந்தில் உள்ள பிரெடி கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 256 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரரான எவின் லீவிஸ் 44 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாய் ஹோப் 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், கீசி கார்ட்டி 22 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன 48 ரன்களும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் பந்துவீச்சில் மேத்யூ ஹம்ப்ரேஷ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

6 months ago
7







English (US) ·