லெஜண்ட்ஸ் கிரிக்கெட் விலகல்: இந்திய வீரர்களின் கபட நாடகம் - முன்னாள் பாக். பவுலர் விளாசல் 

5 months ago 6
ARTICLE AD BOX

2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் போட்டி ரத்தானது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்துர் ராவுஃப் கான் இந்திய வீரர்களின் பாசாங்குத் தனம் என்று சாடியுள்ளார்.

இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்​கா, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, பாகிஸ்​தான், மேற்கு இந்​தி​யத் தீவு, தென் ஆப்​பிரிக்கா ஆகிய 6 அணி​கள் இந்த வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் பங்கேற்றனர். இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டார், அணியில் ஷிகர் தவன், ஹர்பஜன், ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பாத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த தொடரில் இந்​தி​யா-​பாகிஸ்​தான் அணி​கள் மோதும் ஆட்​டம் நேற்று நடை​பெறு​வ​தாக இருந்​தது. இதனிடையே இந்த போட்​டி​யில் இருந்து ஷிகர் தவான், இர்​பான் பதான், யூசுப் பதான், ஹர்​பஜன் சிங் உள்​ளிட்ட சில வீரர்​கள் வில​கினர். ஜம்​மு-​காஷ்மீரின் பஹல்​காமில் நடந்த தீவிர​வாத தாக்​குதலுக்கு பாகிஸ்​தானே காரணம் என்று குற்​றம்​சாட்டி அவர்​கள் விளை​யாட மறுத்துவிட்​ட​தாக கூறப்​படு​கிறது.

Read Entire Article