‘வந்தார்… வென்றார்’ - வாஷி வருகையை அடுத்து சுந்தர் பிச்சைக்கு குஜராத் டைட்டன்ஸ் ரிப்ளை

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அசத்தினார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் வாஷிங்டன் சுந்தர். இந்நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை குஜராத் அணியில் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யாதது குறித்து சமூக வலைதள பதிவு மூலம் கேட்டிருந்தார். அதற்கு தற்போது குஜராத் அணி பதில் தந்துள்ளது.

சுந்தர் பிச்சையின் ட்வீட்டை மேற்கோள் காட்டி “சுந்தர் வந்தார்… வென்றார்” என பதிவிட்டுள்ளது குராஜாத் அணி. ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான வாய்ப்பாக உள்ளது. நடப்பு சீசனில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை ஹைதராபாத் அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் பெற்றிருந்தார்.

Read Entire Article