ARTICLE AD BOX

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் என இருவரும் அபார தொடக்கம் கொடுத்தனர். அதிலும் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் அதிரடி அற்புத ரகம்.
துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபர்ஹான் 58, சயிம் அயூப் 21, முகமது நவாஸ் 21, பஹீம் அஷ்ரப் 8 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர்.

3 months ago
5







English (US) ·