ARTICLE AD BOX

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் இளம் வயது வீரராக அறியப்படுகிறார் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உடனான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக அவர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த், முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்த நிலையில் டாஸின் போது தங்கள் அணியில் இளவயது வீரர் வைபவ் விளையாடுவதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாற்று கேப்டன் ரியான் பராக் உறுதி செய்தார். இப்போது அந்த அணியின் இம்பேக் பிளேயர் பட்டியலில் வைபவ் இடம்பெற்றுள்ளார். அந்த அணி பேட் செய்யும் போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 months ago
8







English (US) ·