ARTICLE AD BOX

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அல்வாவுக்கு புகழ்பெற்ற ‘இருட்டுக் கடை’யை வரதட்சிணையாக எழுதி தருமாறு கேட்டு மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டுவதாக கடை உரிமையாளரும், அவரது குடும்பத்தினரும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், வரதட்சிணை எதுவும் கேட்கவில்லை என்று மருகமனின் தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி டவுனில் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியினரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா, தனக்கு கணவர் வீட்டில் இருந்து வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக இருட்டுக் கடை உரிமையாளர் கவிதா ஹரிசிங் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவுக்கும், கோவையை சேர்ந்த உறவினர் மகன் பல்ராம்சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடத்தி வைத்தோம்.

8 months ago
8







English (US) ·