ARTICLE AD BOX

விருதுநகர்: கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக விருதுநகர் நீதிமன்றத்தில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணை இம்மாதம் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்குகளை முடித்துவிட்டு நிம்மதியாக வாழ ஆசைப்படுவதாக வரிச்சியூர் செல்வம் அப்போது பேட்டியளித்தார்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்தார். பின்னர் ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் இருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு திடீரென செந்தில்குமார் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

8 months ago
8







English (US) ·