ARTICLE AD BOX

புதுச்சேரி: வாட்ஸ் அப் தகவலால் போலி பங்குச் சந்தையில் முதலீடு செய்து ரூ.14 லட்சத்தை புதுவை அரசு ஊழியர் இழந்தது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை லாஸ்பேட்டையைச் சேர்ந்த 43 வயது அரசு ஊழியர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து திறமையாக சம்பாதிப்பது எப்படி? மிக அதிக லாபத்தை தருகின்ற பங்குகள் எவை? நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே மாதத்தில் பல கோடி ரூபாயை சம்பாதிக்க பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது எப்படி? போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள் என்று குறுந்தகவல்கள் வந்தன.

7 months ago
8







English (US) ·