விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்ற ஒப்புதல்

6 months ago 8
ARTICLE AD BOX

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை, மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றும் மனு ஏற்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கடந்த 2023-ம் ஆண்டு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கண்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது.

Read Entire Article