ARTICLE AD BOX

நாகப்பட்டினம் / மேட்டூர்: நாகை அருகே விஜய்யை கண்டித்து போஸ்டர் ஒட்டிய இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக தவெகவினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதேபோல, நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தில் போஸ்டர் ஒட்டிய வேளாங்கண்ணியைச் சேர்ந்த பரத்ராஜிடம்(25) தவெக நிர்வாகிகள் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. பரத்ராஜ் திமுக உறுப்பினர் என்றும், போஸ்டர் ஒட்டும் வேலை செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

2 months ago
4







English (US) ·