ARTICLE AD BOX

காரைக்குடி: காரைக்குடியில் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் அழகப்பன் (56). இவர் அங்கு தங்கியுள்ள கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

10 months ago
9







English (US) ·