ARTICLE AD BOX

கடலூர்: குடி போதையில் காரை ஓட்டி, சாலையோரத்தில் நின்ற 2 பேரின் உயிரிழப்புக்கு காரணமான எஸ்எஸ்ஐ மற்றும் காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் முதுநகர் அருகேயுள்ள அன்னவெளி அருந்ததி நகரைச் சேர்ந்த வடிவேல் (35), பாஸ்கர் (41), பெரிய காட்டு சாகையைச் சேர்ந்த ஜெயராஜ் (45) ஆகியோர் கட்டிடத் தொழிலாளிகள்.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் மாலை அன்னவெளி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது கடலூரில் இருந்து திட்டக்குடி நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.

1 month ago
3







English (US) ·