ARTICLE AD BOX

சென்னை: வீட்டுமனைகள் தருவதாகக் கூறி 26 பேரிடம் ரூ.3.71 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக சகோதரிகள் இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். சென்னை தி.நகர் ராமகிருஷ்ணா தெருவில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது.
இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக அப்பகுதியை சேர்ந்த சகோதரிகளான அம்சவேணி, லட்சுமி ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்நிறுவனம், குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால், வீட்டுமனைகள் தருவதாக விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தனர்.

3 months ago
5







English (US) ·