ARTICLE AD BOX

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் ஹெப்சிகுடாவில் நிதிப்பிரச்சினை மற்றும் உடல்நிலை பாதிப்புக் காரணமாக 40 வயது கணவன் மற்றும் 35 வயது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகவும், முன்னதாக தங்களின் இரண்டு குழந்தைகளை தம்பதி கொலை செய்துள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
கணவன் மனைவி இருவரது உடல்களும் தனித்தனி அறைகளிலும், அவர்களின் மைனர் குழந்தைகளின் உடல்கள் உயிரற்ற நிலையில் படுக்கை அறையிலும் காணப்பட்டது. இது குறித்து உஸ்மானியா பல்கலை. காவல் நிலைய ஆய்வாளர், என். ராஜேந்திரன் கூறுகையில், “சம்பவம் ஹிப்சிகுடா பகுதியில் உள்ள ரவிந்திராநகர் காலனியில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் இரவு 9.30 மணியளவில் நடந்துள்ளது. அருகில் இருப்பவர்கள் கொடுத்த தகவலின்படி, நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினோம்.

9 months ago
8







English (US) ·