Kayadu Lohar: ``என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்?” - நடிகை கயாடு லோஹர் வேதனை

1 month ago 2
ARTICLE AD BOX

2021ம் ஆண்டு வெளியான 'முகில்பேட்டே' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர்.

அதன் பிறகு 'பதோன்பதம் நூட்டாண்டு' என்ற மலையாள படத்திலும், 'அல்லூரி' என்ற தெலுங்கு படத்திலும், 'ஐ பிரேம் யு' என்ற மராத்தி படத்திலும் நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ’டிராகன்’ படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

Kayadu LoharKayadu Lohar

அந்த சமயத்தில் கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருந்தார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தன.

மறுபுறம் தனக்கு தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு தன்னை புரொமோட் செய்துகொள்கிறார் கயடு லோஹர் என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அவரிடம் தன் மீது எழும் விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “சோஷியல் மீடியாக்களில் என்னைப் பற்றி பரவும் அவதூறு கருத்துகள் மிகவும் வேதனை அளிக்கிறது.

Kayadu LoharKayadu Lohar

ஒரு கண்ணியமான பின்னணியில் இருந்து வருபவள் நான், எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் என்னை ஏன் சிலர் டார்கெட் செய்கிறார்கள்?

பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், ஆழ் மனதில் அது உறுத்திக் கொண்டே இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.

"உங்க லாயல்டிக்கு ஒரு சின்ன கிஃப்ட்"- இணை இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்
Read Entire Article