ARTICLE AD BOX
MURMUR ஆரம்பத்தில் சற்றே கோபத்தைக் கிளறினாலும், இறுதிக் காட்சி நெருங்கும்போது மற்றவர்களை விட இவர் பரவாயில்லை என்ற பெயரைப் பெறுகிறார் ரிச்சி கபூர். அதேபோல், உள்ளூர் வழிகாட்டியாக வரும் யுவிகா ராஜேந்திரனின் நடிப்பிலும் பெரிதாகக் குறை ஏதுமில்லை. இதுதவிர, தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், அரியா செல்வராஜ் ஆகிய மூவரும் பயந்த மாதிரி நடிக்கிறார்கள். ஆனால், பார்க்கும் நமக்குப் பயம் வராமல் சிரிப்புதான் வருகிறது! ஒரு திகில் படத்தில் முக்கியமானது, பார்வையாளர்களைக் கதாபாத்திரங்களுடன் இணைத்து, அவர்களின் பயத்தைப் பகிர்ந்து கொள்ள வைப்பது. ஆனால் இங்கு அதற்கு மாறாக, ஒன்றுமே இல்லாமல் அவர்கள் ஓடுவதையும் கத்துவதையும் 'லூப்' மோடில் ஓடவிட்டிருக்கிறார்கள்.
ஆங்கிலப் படப் பாணியில் வித்தியாசமான வித்தையைக் காட்டலாம் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன். ஆனால், திரைக்கதை ஸ்ட்ராங்காக இருந்தால்தான், எந்த ஜானராக இருந்தாலும் அதைச் சுவாரஸ்யமாக்க முடியும். அதை மறந்து வெறும் கேமரா ஆட்டமும் பேய் சத்தமும் மட்டுமே மீண்டும் மீண்டும் திரையில்! ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு? கேமரா ஆடுவதுதான் இந்த ஜானரின் அடிப்படை என்றாலும், அதை வடிவமைப்பதில் ஒரு சிரத்தை இருந்தால்தான் பார்வையாளர்களைப் படத்துக்குள் கொண்டு வர முடியும்! கண்ணாபின்னா என்று அசையும் காட்சிகள், அயர்ச்சியையும் தலைவலியையும் ஒருசேர மண்டைக்குக் கொண்டு வந்து, தைலம் தேட வைக்கிறது.
“ஐயோ, ஐயோ” என்று கத்திக்கொண்டு ஓடுவதையே மீண்டும் மீண்டும் பார்ப்பது, இது திகில் படமா அல்லது 'ரன்னிங் இன் மேஸ்' என்ற போகோ சேனல் விளையாட்டா என்ற குழப்பத்தைக் கொடுக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் இது பொறுமையைச் சோதிக்கும் ஒரு பரிசோதனையா என்ற கேள்வியே மிஞ்சுகிறது. படம் முடியும் கடைசி பத்து நிமிடங்கள் சற்றே சுவாரஸ்யம் தருகின்றன. ஒருவேளை OTT தளத்தில் வந்தால், “x2” என்று வேகமாக முன்னோக்கிச் செலுத்தி, அந்த இடத்துக்கு வந்துவிடலாம். ஆனால், தியேட்டரில் என்ன செய்வது? பயமோ, அழுகையோ, சிரிப்போ எந்தவித உணர்வையும் கடத்தாமல், படம் முடிந்தவுடன் தியேட்டரை விட்டு வெளியேறும் 'சுதந்திர' உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.
MURMUR 
9 months ago
10






English (US) ·