ARTICLE AD BOX

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோவின் ‘லெஸ் மிஸரபிள்ஸ்’, 19-ம் நூற்றாண்டின் சிறந்த ஐரோப்பிய நாவல்களின் வரிசையில் ஒன்றாகப் பேசப்பட்டது. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல், பல மொழிகளில் திரைப்படமாகவும் சின்னத்திரை தொடராகவும் மேடை நாடகமாகவும் மாற்றம் பெற்றிருக்கிறது. இந்நாவலை சுத்தானந்த பாரதியார் தமிழில் மொழியாக்கம் செய்திருந்தார். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம், ‘ஏழை படும் பாடு’.
திருட்டு வழக்குக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கந்தனை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாவர் மீண்டும் கைது செய்கிறார். ஒரு கிறிஸ்தவ பேராயர் அவனுக்கு உதவுவதால், கந்தன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அவன் ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கிறான். தனது அடையாளத்தை மாற்றி உயரும் அவன், ஒருநாள் அந்நகரத்தின் மேயராகிறான். அவன் பழைய குற்றவாளி என்பதைத் தெரிந்து கொள்ளும் இன்ஸ்பெக்டர் ஜாவர், அவனை மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில் ஜாவரின் உயிரைக் காப்பாற்றுகிறான் கந்தன். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

1 month ago
3






English (US) ·