ARTICLE AD BOX

‘ராட்சசன்’ என்ற ப்ளாக்பஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். அதன்பிறகு அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ‘ராட்சசன்’ இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. ‘ஆர்யன்’ படத்தின் ஒன்லைன் கதையை சொல்வது ஸ்பாய்லர்தான் என்பதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்க.
சமூகத்தில் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இல்லாததால் விரக்தியடையும் எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்), ஒரு முன்னணி தொலைகாட்சி அலுவலகத்தில் நுழைந்து அங்கு நடக்கும் ஒரு விவாத நிகழ்ச்சியை ஹைஜாக் செய்கிறார். நேரலையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஒரு இளம் நடிகரை துப்பாக்கியால் சுடுகிறார். தான் எழுதிய கதையின்படி அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து கொலைகளை தான் செய்ய இருப்பதாகவும், அதில் ஒரு கொலை இப்போதே இந்த அரங்கிலேயே நடக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.

1 month ago
3






English (US) ·