குரு தத் 100 | ‘பியாசா’வைப் படைத்த காட்சிக் கவிஞன்!

2 months ago 4
ARTICLE AD BOX

‘வாழ்க்கை கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து இலக்கியம், ஓவியம், நடனம், நாடகம், சினிமா ஆகியவற்றைப் படைப்பவனே நேர்மையான கலைஞன். அவனது கற்பனை உண்மைக்கு நெருக்கமானது’ என்று சொன்னவர் இயக்குநர், எழுத்தாளர், நடிகர் குரு தத். இதை அவர் தனது சொந்த வாழ்க்கையிலிருந்துதான் சொல்லியிருக்க முடியும். ஏனென்றால், அவர் வாழ்க்கையையும் தன்னுடைய திரைப்படங்களையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க விரும்பாத படைப்பாளி. பாலிவுட்டுக்கு ஒரு சிறந்த பொற்காலத்தை 50 மற்றும் 60களில் தன்னுடைய அற்புதமான படைப்புகளின் வழியாகச் சிருஷ்டித்தவர். அடிப்படையில் சிறுகதை எழுத்தாளராகவும் கவிஞராகவும் இருந்ததால் இந்தி சினிமாவின் திரைமொழிக்குத் திசை வழியைக் காட்டியவர். சினிமா என்பது காட்சிமொழிக்குள் இயங்கும் இலக்கியம் என எண்ணியவர்!

காட்சிமொழியே சினிமா, ஒளியும் நிழலும் இணைந்து முயங்கும் ஒளிப்பதிவும் காட்சிக் கோணங்களும் கதை சொல்வதற்கான முதன்மைக் கருவி என்பதை வெகுஜன சினிமா தளத்தில் எடுத்துக்காட்டிய இந்தித் திரைப்பட க(வி)லைஞன். குரு தத் படச்சுருள் வழியாகச் சிருஷ்டித்த ஒவ்வொரு ஷாட்டும் சிறந்த கவிதை போலக் கைவரப் பெற்றிருக்கும். முதன்மைக் கதாபாத்திரங்களுக்கான குளோஸ் அப் ஷாட்களில் துலங்கும் கண்களில், அவற்றின் கடந்த காலம் தக்க வைத்திருக்கும் நினைவுகளின் மகிழ்ச்சியும், அது பின்னர் உருவாக்கிச் சென்ற இழப்பின் வலியும் நிரந்தரத் தடயமாக ஒளிரும்.

Read Entire Article