சப்தம்: திரை விமர்சனம்

9 months ago 9
ARTICLE AD BOX

மூணாறில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்கின்றனர். பேய்தான் இதற்குக் காரணம் என வதந்தி பரவுகிறது. அங்கே பேய் இல்லை என்பதை நிரூபிக்காவிட்டால், பழமையான அக்கல்லூரியின் புகழ் கெடுவதுடன் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படும். இதனால், அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அவற்றுடன் தொடர்புகொள்ளும் ‘பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்’ ஆன ரூபனை (ஆதி) வரவழைக்கின்றனர். அவர் தனது விசாரணை மற்றும் ஆய்வில் என்ன கண்டுபிடித்தார்? தற்கொலைகளின் மர்மம் விடுபட்டதா? என்பது கதை.

‘பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்’ என்பவர் யார், அவர்கள் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டத்தை எப்படிக் கண்டறிகிறார்கள், ஒலிகள் வழியாக அவற்றுடன் எவ்வாறு உரையாடுகிறார்கள், அவை வெளிப்படுத்தும் ஒலிகளை எவ்வாறு டீகோட் செய்கிறார்கள் என்பதைச் சித்தரிக்கும் தொடக்கக் காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

Read Entire Article