ARTICLE AD BOX

சமந்தா நடித்த, ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளியானது. அடுத்து, ‘மா இண்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து நடிக்கிறார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இப்போது அதிலிருந்து மீண்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சினிமாவில் 15 வருடத்தை நிறைவு செய்துள்ளார் சமந்தா. இதற்காகச் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது 15 ஆண்டு கால சினிமா வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: முதல் படமான ‘மாஸ்கோவின் காவிரி’யில் என் நண்பர் ராகுல் ரவீந்தரனுடன் நடித்தேன். அந்த படம் பற்றிய நினைவுகள் அதிகம் இல்லை. அடுத்த படமான ‘யே மாயா சேசவே’ (விண்ணைத் தாண்டி வருவாயா -தெலுங்கு பதிப்பு) படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் இப்போதும் நினைவில் இருக்கிறது.

9 months ago
9






English (US) ·