“சினிமாவில் எனக்கு வழிகாட்டிகள் இல்லை” - சமந்தா

9 months ago 9
ARTICLE AD BOX

சமந்தா நடித்த, ‘சிட்​டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளி​யானது. அடுத்​து, ‘மா இண்டி பங்​காரம்’ என்ற தெலுங்கு படத்​தைத் தயாரித்து நடிக்​கிறார். மயோசிடிஸ் நோயால் பாதிக்​கப்​பட்​டிருந்த அவர், இப்​போது அதிலிருந்து மீண்டு சினி​மா​வில் கவனம் செலுத்தி வரு​கிறார். இந்​நிலை​யில் சினி​மா​வில் 15 வருடத்தை நிறைவு செய்​துள்​ளார் சமந்​தா. இதற்​காகச் சென்னை​யில் நடந்த நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட அவர், தனது 15 ஆண்டு கால சினிமா வாழ்க்கை ஆசிர்​வ​திக்​கப்​பட்​டது என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: முதல் படமான ‘மாஸ்​கோ​வின் காவிரி’​யில் என் நண்​பர் ராகுல் ரவீந்​தரனுடன் நடித்​தேன். அந்த படம் பற்​றிய நினை​வு​கள் அதி​கம் இல்​லை. அடுத்த படமான ‘யே மாயா சேசவே’ (விண்​ணைத் தாண்டி வரு​வாயா -தெலுங்கு பதிப்​பு) படத்​தின் ஒவ்​வொரு ஷாட்​டும் இப்​போதும் நினை​வில் இருக்​கிறது.

Read Entire Article