த தின் மேன் - 1934: ஒரு வார்த்தையில் சிக்கும் குற்றவாளி | ஹாலிவுட் மேட்னி

2 months ago 4
ARTICLE AD BOX

கொலை செய்து தலைமறை​வான​தாகக் கருதப்​படும் குற்​ற​வாளியே கொல்​லப்பட்​டிருப்​ப​தைக் கண்​டறிவது​தான், இந்த ‘த தின் மேன்’ படத்​தின் ஒரு வரிக்​கதை. நியூ​யார்க் நகரில் கிளைட் வைனன்ட் (Clyde Wynant) என்ற விஞ்​ஞானி, தன் ஆய்​வுக்​கூடத்​தில் ஒரு புதிய கண்​டு​பிடிப்​பில் மூழ்​கிக் கிடக்​கிறார். அவருடைய மகள் டொரோத்தி தன் காதலனை அறி​முகம் செய்து கல்​யாணம் செய்து கொள்​ளப் போவ​தாகச் சொல்ல, “இவர்ட்ட என்​னப்​பத்​தி, உன்​னப்​பத்​தி, உன் அம்மா பத்​தி, அம்​மாவோட பாய்ஃபிரண்ட் பத்தி சொல்​லிட்​டி​யா?” என்று கேட்​கிறார், வைனன்ட்.

“எல்​லாம் சொல்​லி​யாச்​சு” என்​கிறாள், மகள். “தெரிஞ்​சுமா கல்​யாணம் பண்​ணிக்க விரும்​புறான்” என்று கிண்​டலடிக்​கும் வைனன்ட் வெளியூர் கிளம்​பு​கிறார். அதற்​கு​முன் வங்​கிக்​குச் சென்று லாக்​கரை செக் பண்​ணுகிறார். அதில் எது​வுமில்​லாத கோபத்​தில் செக்​ரட்​டரி ஜூலி​யாவை திட்டி விட்​டுச் செல்​கிறார். பின் திரும்பி வரவே இல்​லை. ஜூலியா கொல்​லப்படு​கிறார். அவளைக் கொன்​று​விட்டு வைனன்ட், தலை மறை​வாகி விட்​டார் என்ற செய்தி பரவு​கிறது.

Read Entire Article