“தவெக செய்ய வேண்டியது....” - கரூர் சம்பவம் குறித்து நடிகர் விஷால் பதிவு

3 months ago 4
ARTICLE AD BOX

தவெக கூட்ட நெரிசல் துயரம் குறித்து நடிகர் விஷால் காட்டமாக பதிவிட்டுள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரூர் துயரச் சம்பவம் குறித்து விஷால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “முழுக்க முட்டாள்தனம். நடிகர், அரசியல் கட்சித் தலைவர் விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேள்விப்படுவது மனதை வேதனைப்படுத்துகிறது, முற்றிலும் சரியல்ல.

Read Entire Article